districts

img

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

உடுமலை, அக்.14- மடத்துக்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவ சாயிகள் பயன்பெற வேண்டும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதி களில் நடப்பு பருவத்தில் சுமார் 2,400 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பெரும் பான்மையாக சோழமாதேவி, கடத்தூர், கணி யூர், காரத்தொழுவு, அக்ரகாரம் கண்ணாடிப் புத்தூர் பகுதிகளில் சுமார் 1,600 ஏக்கர் நெல் பயிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தற் போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வரு வதால், உடனடியாக நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதற் கான திறப்பு விழாவில் திருப்பூர் மண்டல மேலாளர் சின்னுசாமி கலந்து கொண்டு கொள்முதல் மையத்தை தொடங்கி வைத் தார். மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் தேவி முன்னிலை வகித்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,203 மற் றும் ஊக்கத்தொகை ரூ.107 சேர்த்து மொத்தம்  ரூ.2,310க்கு கொள்முதல் செய்யப்படும். இது  கடந்த ஆண்டைவிட ரூ.150 அதிகம் ஆகும்.  பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,183 மற்றும் ஊக்கத்தொகை ரூ.82 சேர்த்து மொத் தம் ரூ.2,265க்கு கொள்முதல் செய்யப்படும். இதுவும் கடந்த ஆண்டை விட ரூ.150 அதி கம் ஆகும். கொள்முதல் செய்யப்படும் நெல் லில் சேதமடைந்த, முளைவிட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 17 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், குறிப்பிடத்தக்க தர நிர்ண யங்களின் அடிப்படையில் நெல் கொள் முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்து பயனடையலாம், என்றனர்.