ஈரோடு, ஜன. 30- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் மீது வரும் ஏப் ரல் மாதத்திற்குள் தீர்வு காணப்பட வில்லையெனில் மே முதல் வாரத் தில் மாநிலந்தழுவிய இயக்கத் திற்கு மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பு அறைகூவல் விடுத்துள் ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் மாநில நிர் வாகிகள் மற்றும் செயற்குழு கூட் டம் ஈரோடு டிபி.முத்துசாமி நினை வகத்தில் அமைந்த தோழர்கள் கே. பாலகிருஷ்ணன் மற்றும் எம்.என். சிவசங்கரன் ஆகியோர் நினைவ ரங்கில் ஜன.29,30 ஆகிய தேதிக ளில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, மாநில துணைத் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் எஸ். எஸ்.சுப்பிரமணியன், துணை பொதுச் செயலாளர்கள் வி.பிச்சைராஜன், எம்.பாலசுப்பிரமணி, ஆர்.ராமநா தன், பொருளாளர் ஏ.பழனி உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சே.பெரு மாள், எம்.காளியப்பன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், புதிய ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். காப்பீட்டு திட் டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி செலவு செய்த முழு தொகை யையும் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பெயரில் மின்வாரி யத்தை தனியார் மயமாக்கும் போக்கைக் கைவிட வேண்டும். மின் வாரியத்தில் அவுட்சோர்சிங் என்ற முறையை புகுத்தி காலிப்பணி யிடங்களை நிரப்பாமல் தவிர்க்கும் போக்கைக் கண்டிக்கிறோம். கமுட் டேசன் பிடித்தம் 15 ஆண்டுகள் என் பதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். 70 வயது பூர்த்தியான வர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப் படி 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. மேலும், ஏப்ரல் மாதத்திற்குள் கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை யெனில், மே மாதம் முதல் வாரத் தில் மாநிலம் தழுவிய இயக்கம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள் ளது.