சேலம், மே 28- சேலம் சாப்ட் டென்னிஸ் அகாடமி விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 14 ஆவது மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரிலுள்ள சாப்ட் டென்னிஸ் அகாடமி விளை யாட்டு மைதானத்தில் கடந்த மே 26 மற் றும் 27 ஆம் தேதிகளில் சேலம் சாப்ட் டென்னிஸ் அகாடமி மற்றும் ரெட் சைன் சாப்ட் டென்னிஸ் அகாடமி சார்பில் சீனி யர்களுக்கான சாப்ட் டென்னிஸ் போட்டி கள் நடைபெற்றன. இதில் சேலம், கோவை, வேலூர், கரூர் மற்றும் காஞ்சி புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக ளுக்கு குழுப்போட்டி, இரட்டையர்கள், கலப்பு இரட்டையர் என பல்வேறு வித மான போட்டிகள் நடைபெற்றன.
இப் போட்டிகளில் சேலம் அணி வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர். குழுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் அணியைச் சேர்ந்த வீரர்கள் முதலிட மும், வேலூர் அணி இரண்டாம் இடத் தையும், கரூர் மற்றும் கோவை அணி யினர் மூன்றாவது இடத்தைப் பிடித்த னர். தனிநபர் ஆண்கள் பிரிவில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் முதலிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்றல் இரண்டாம் இடமும், சேலம் கர்ணன் மற்றும் வேலூர் ஸ்ரீஜன் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இரட்டையர் ஆண்கள் பிரி வில் சிவப்பிரகாஷ் - பின்னிஷ் முதலிட மும், வேலூர் தென்றல் - பிரேம் இரண் டாம் இடமும், சேலம் அணியைச் சேர்ந்த வீரர்கள் கர்ணல் - பரத்ராஜ் மற்றும் வேலூர் ஸ்ரீஜன் - ஸ்ரீராம் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க தலை வருமான அர்ச்சுனன், தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் துணைத்தலைவர் செந்தில் குமார், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா ஆகியோர் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரி வித்தனர்.