ஈரோடு, ஜூலை 13- புஞ்சை புளியம்பட்டியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் புஞ்சை ஸ்போர்ட்ஸ் அகாடெமி மற்றும் ஈரோடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, காஞ்சி புரம், சிவகாசி, நீலகிரி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங் கேற்றனர். இதில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆண் கள், பெண்கள் எனவும், வயது அடிப்படையில் 6, 8, 10, 12, 14, 16 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட என 7 பிரிவுகளாகவும், 200 மீட்டர், 300 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் தூரம் எனவும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேசன் ஆஃப் ஈரோடு சங்கத்தின் தலைவர் பிரபு மற்றும் சிறப்பு அழைப்பாளர் தாமோதரசாமி, சாணக்யா பள்ளி தாளாளர் உபேந்திர நாத் சிங் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.