districts

img

சேலத்தில் மாநில அளவிலான கபடி போட்டி

சேலம், மே 11- சேலத்தில் நடைபெற்ற மாநில அளவி லான கபடி போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று தங்களின் திறமை களை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டான கபாடி போட்டியை இன்றைய இளை ஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம்  மாவட்டம், ஏற்காடு அடிவாரம் பகுதியில் அசோகா பிரதர்ஸ் கபடி குழு சார்பில் 39 ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி  புதனன்று நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலிருந்து 20க்கும் மேற்பட்ட அணி கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக  ரூ.77 ஆயிரத்து 777 ரூபாயும், இரண்டாம் பரி சாக 55 ஆயிரத்து 555 ரூபாயும், மூன்றாம் பரிசாக 22 ஆயிரத்து 222 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவ்விளையாட்டுக்கான ஏற்பாட் டினை விஷ்ணு பார்த்திபன் செய்திருந்தார்.