தருமபுரி, பிப்.1- மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு, பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவி வெற்றி பெற்றார். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜன.28, 29 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஆயி ரத்து 440 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி சுபிக்ஷா (12) கலந்து கொண்டு, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தார். ஏற்கனவே, தஞ்சை மற்றும் சென்னை நேரு உள்ளரங்கு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டியில் முதலிடமும், நாமக்கல் மாவட்டத்தில் நடை பெற்ற போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றிருந்தார். இதனிடையே மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி யில் சாதனை பெற்ற மாணவி சுபிக்ஷா மற்றும் பயிற்சியா ளர் ராஜேஷ் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி னர்.