திருப்பூர், பிப். 2 - ஒரு மொழியின் தொன்மையான வரலாற் றுக்கும், பண்பாட்டுச் சிறப்புக்கும் குறியீட்டு எழுத்து வடிவம் ஆதாரப்பூர்வமாக உள் ளது என்று மக்கள் சிந்தனை பேரவை தலை வர் ஸ்டாலின் குணசேகரன் கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில், “எழுத்து தெய்வம், எழுது கோல் தெய்வம்” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது: எழுத்து தெய்வம், எழுதுகோல் தெய்வம் என்பது மகாகவி பாரதியின் வரிகள் ஆகும். சுமேரிய நாகரீகத்தின் எழுத்துக்கள் பழமை யானவை. எகிப்து, சீன எழுத்துக்கள் தான் மிகத் தொன்மையானவை, சிந்து சமவெளி எழுத்துக்கள் பழமையானவை; மிகப்பிர சித்தி பெற்றவை. 1812 ஆம் ஆண்டில் திருக்கு றளை அச்சிட காரணமாக இருந்தவர் எஃப். டபிள்யூ.எல்லீஸ் என்ற ஆங்கிலேய சிவில் சர்வீசஸ் அதிகாரி ஆவார். அவர் தான் முதன் முதலில், தமிழ் மொழி, சமஸ்கிருதத்திலி ருந்து வேறுபட்ட தனித்தன்மை கொண்ட மொழியாக உள்ளது என்று கூறினார். அவ ரைத் தொடர்ந்து கால்டுவெல், ஒன்பது மொழி கள் கொண்ட திராவிட மொழிக் குடும்பத் தில் தலைமை மொழியாக தமிழ் உள்ளது என்று கூறினார்.
கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் இந்த மண்டலத்தில் ஒரே தன்மையாக இருக்கக்கூடியவை ஆகும். நிர்வாக எல்லைகளால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் வரலாற்று ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒரே தன்மையில் இருக்கக்கூடிய பகு திகளாகும். இங்குள்ள கொடுமணல் எனும் ஊர் நொய்யல் வழி நாகரீகத்தை கொண்ட வர லாற்றுச் சிறப்பு மிக்க பகுதி என்று 1960 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வி.என். சீனி வாச தேசிகர் பதிவு செய்தார். அதன் பிறகு 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் பத்திரிகை யான தமிழரசுவில் “நெடும் புகழ் கொடு மணல்” என்ற ஒரு சிறப்பான கட்டுரை வெளி வந்தது. தமிழ் ஆசிரியர், முனைவர் பட்டம் பெற்ற கல்வெட்டியல் துறை தலைவர் செ. ராசு கொடுமணல் பற்றி ஒரு விரிவான கட் டுரை எழுதியிருந்தார். அதன் பிறகு 1985-ல் கொடுமணலில் முறையான ஆய்வு தொடங் கியது. பேராசிரியர் க.ராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் பிறகு இதுவரை ஏராளமான தொல்லியல் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு இந்தியாவிலேயே வேறு எங்கும்
இல்லாத அளவிற்கு அதிக அளவிலான ரோமாபுரி நாணயங்கள் கிடைத்துள்ளன. அங்கு இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலை, வண்ண வண்ண பாசிகள், ஆபரணங்கள் தயாரிப்பு என ஒரு வணிக நகரம் இருந்திருக் கிறது. அமராவதி, நொய்யல், பவானி என கொங்கு மண்டலத்தில் மட்டும் கொடுமணல் போல் ஏறத்தாழ 200 பகுதிகள் ஆய்வு செய்வ தற்கு தயார் நிலையில் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறு வனம், தொன்மை தமிழ் எழுத்தியல் என்ற ஒரு சிறப்பான நூலை வெளியிட்டு இருக்கி றார்கள். எழுத்தின் வரலாற்று பயணமாக அந்த நூல் உள்ளது. குறியீடுகளில் தொடங்கி தமிழ் பிராமி எழுத்துக்கள் வந்து, அதிலி ருந்து தற்போது நாம் பயன்படுத்தும் எழுத்து வடிவம் வந்திருக்கிறது. இப்போது நாம் எழு தும், படிக்கும் எழுத்துக்கள் ஆரம்ப காலத் தில் இல்லை. சங்க இலக்கியங்களும், தொல் காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூலும் 2000 ஆண்டுக்கு முற்பட்டவை. ஆரம்பகால குறி யீடு எழுத்துக்களே ஆயிரம் ஆண்டுகள் இருந் திருக்கின்றன. அதன் பிறகு வந்த தமிழ் பிராமி எழுத்துக்கள்தான் இப்போது நாம் பயன் படுத்தும் தமிழ் எழுத்துக்களின் தந்தை, தாயாக இருந்திருக்கிறது.
சிந்து சமவெளியில் இருக்கும் எழுத் துக்களும், குறியீடுகள் தான். அங்கிருக்கும் எழுத்துக்களும், தமிழ்நாட்டிலும், இலங்கை யிலும் கிடைத்திருக்கக்கூடிய குறியீடுகளும் ஒத்துப் போகின்றன. பொருந்தல், கொற்கை, கீழடியில் கிடைக்கக்கூடிய தமிழ் எழுத்து குறியீடுகள், ஆய்வு செய்யப்பட்டதில் கி.மு. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று தெரி யவந்துள்ளது. அதாவது 2600 ஆண்டுக ளுக்கு முற்பட்டவை அந்த எழுத்துக்கள். அப் போதே சங்க இலக்கியங்கள் சுட்ட கூடிய வர லாறும், பண்பாடும், பாரம்பரியமும் இருந்த தென்றால், அதற்கும் முன்பே, சிறப்பான வர லாறும், பாரம்பரியமும், தொடர்ச்சியாக இருந்திருந்தால் தான் அதை படைத்திருக்க முடியும். அசோகன் பிராமி எழுத்துக்கள் சாய லில் தான் தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் உள்ளன என்று கூறினர். ஆனால் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கண்டறியப்பட்ட தில், அசோகர் பிராமி எழுத்துக்களுக்கும், பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை தமிழ் பிராமி எழுத்துக்கள் என்று ஆதாரப்பூர்வ மாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியவியல் என்றாலே சமஸ்கிருதவி யல் என்று தான் உலகம் நினைத்திருந்தது. ஆனால் இப்போது அது மாறி இருக்கி றது
.“எழுத்து தெய்வம்” என்று சொன்னதன் மூலம் பாரதி, எல்லாவற்றையும் விட உயர்ந் ததாக எழுத்தே இருக்கிறது என்று கூறி இருக் கிறார். தமிழ் குறியீடு எழுத்து வடிவத்தின் மூலம் தான் 2500 ஆண்டுகள் பழமையும், வர லாற்றுச் சிறப்பும், தொன்மையும், பண்பா டும் கொண்டது தமிழ் என்பது நிறுவப்பட்டி ருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் குணசேகரன் கூறினார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற் றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரம ணியம் தலைமை வகித்தார். எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் இலக்கியம் சூழலில் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊராட் சிகள் உதவி இயக்குனர் மதுமிதா, மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நிறைவாக பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் பி.சௌந்தர பாண்டியன் நன்றி கூறினார்.