கோபி, நவ.5- கோபி அருகே வெங்கமேடுபுதூரில் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குருமந்தூர், கரட்டுபாளையம், குருமந்தூர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெங்கமேடுபுதூரில் உள்ள புதுத்தோட் டம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் விளை நிலங்களில், மழை நீர் தேங்கியது. வாழைத் தோட்டத்திற்குள் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.