கோவை, ஜூலை 3- மேடை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாசமாக கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேடை நடன கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவில் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டால் அவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலை யில், கோவை மாவட்டத்தில், பொது நிகழ்வுகளில் சிலர் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், முறைப்படி விதிக ளுக்கு உட்பட்டு செயல்படும் மேடை கலைஞர்கள் நடத்தும் நிகழ்விற்கு அனுமதி வழங்க வேண்டும் என புதனன்று மனு அளித்தனர். முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மேடை நடன கலைஞர்கள் சங்கத்தினர் எம்ஜிஆர், விஜயகாந்த், எம்ஆர் ராதா உள்ளிட்டோர் வேடம் அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.