districts

img

இலங்கை பொருளாதார நெருக்கடி: நிவாரண நிதி வழங்கிய சிறுமி

பொள்ளாச்சியிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வரும் சிறுமி நூரி பாத்திமா இலங்கை மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1073 நிதி வழங்கியுள்ளார்.

பொள்ளாச்சியில் உள்ள  தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் மாணவி நூரி பாத்திமா தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின்  அவர்களின் நிதி உதவி அறிவிப்பை தொலைக்காட்சியில் கண்டுள்ளார்.

இதனையடுத்து தொலைக்காட்சி  செய்தியை கவனித்த சிறுமி பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இலங்கை மக்களுக்கு ஏதாவது  ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் . என நினைத்து தனது உண்டியலில் உள்ள சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கை மக்களுக்கு நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று தந்தை இக்பாலிடம் கூறியுள்ளார்.

இதனை அறிந்த குழந்தையின் தந்தை இக்பால் உடனடியாக உண்டியலில் உள்ள சில்லறை காசுகளை மொத்தம் சேர்த்து அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று சிறுசேமிப்பு காசுகளை வழங்கி தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1073/ தொகையினை காசோலையாக பெற்று  பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தந்தையுடன் நேரில் சென்று ஆட்சியரிடம் காசோலையை வழங்கினார்.

துயறுற்றிருக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிய சிறுமியின் செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது