districts

img

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை, செப்.3- உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத்துறை அதி காரிகள் திடீர் சோதனையில் கெட்டுப்போன 103 கிலோ மீன் களை பறிமுதல் செய்து அதை பினாயில் ஊற்றி அகற்றி னர். கோவை, உக்கடம் பகுதியில் மீன் மொத்த மற்றும் சில் லறை விற்பனை கடைகளில் செவ்வாயன்று உணவு பாது காப்புத் துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர்  சோதனையில் ஈடுபட்டனர். 16 குழுக்களாக பிரிந்து செயல் பட்ட அதிகாரிகள், மீன் மார்க்கெட்டில் உள்ள ஒவ்வொரு கடை யையும் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோத னையில், குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தாலும் கெட்டுப்போன நிலையில் இருந்த மீன்கள், சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட மீன்கள் என பல்வேறு வகை யான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 103 கிலோ மீன்கள் அனைத்தும்  பின்னர் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. இந்த சோதனை யில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மொத்த மதிப்பு சுமார்  50,000 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறு கையில், பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. கெட்டுப்போன மீன்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற சம்பவங்களை தடுக்க தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும்” என தெரிவித்தனர். இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், சில நேரங் களில் மீன்கள் சற்று விரைவாக கெட்டுப்போய்விடும். இதனை  தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம். ஆனால், செவ்வாயன்று நடைபெற்ற சோத னையில் அதிகளவில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் வருத்தமாக உள்ளது என்றனர்.