districts

img

தனியார் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி

சேலம், ஜூன் 24- தனியார் பேருந்துகளில் வேக  கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட் டுள்ளதாக என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில். சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர  ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்  செ.கார்மேகம் தலைமையில்  நடை பெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை அலுவலர்கள் பங்கேற் றனர்.  இதில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, விபத்துக்கள் மற்றும் உயிரி ழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்  விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தலைக்கவசம் அணி யாமல் இருசக்கர வாகனம் ஓட்டுப வர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுப வர்கள், செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், சாலை சிவப்பு  சிக்னல்களை மீறி வாகனம் ஓட்டுப வர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் என  சாலை பாதுகாப்பு விதிகளை மீறி  வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குகள்  பதியப்பட்டுள்ளது குறித்து விவாதிக் கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர் ஹாரன் பயன்படுத்தினால் விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விதி மீறல்களைக் கண் காணித்துப் பதிவு செய்திட கண்கா ணிப்புக் கேமராக்கள் அதிக அளவில்  பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. தனியார் பேருந்துகளில் முறையாக வேகக் கட்டுப்பாட்டு கருவி கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடும் வகையில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து  நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது.