கோவை, பிப். 11 - கோவை மாநகராட்சியில் புதிய தாக இணைக்கப்பட்டுள்ள பகுதி களுக்கு ரூ. 780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணி கள், பில்லூர் 3 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடி நீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஞாயிறன்று துவக்கிவைத்தார்.
சரவணம்பட்டி பகுதியில் நடை பெற்ற இதற்கான விழாவில், அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துச்சாமி மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கோவை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதி களுக்கு ரூ. 780 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3 வது திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மாதம் ஒருமுறை கோவை வந்து கொண்டு இருக்கின்றேன்.
இது கலைஞர் வாழ்ந்த ஊர். பெரியா ரும், அண்ணாவும் சந்தித்து கொண்ட திருப்பூருக்கு போய்விட்டு, கலைஞர் வாழ்ந்த கோவைக்கு வந்திருக்கின்றேன். ஈரோட்டில் ரூ. 318 கோடி மதிப்பீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு திட்டங்களை துவங்கி வைத் தேன். கோவை மாநகர் முழுவதும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப் படும் என தேர்தல் அறிக்கையில் அறி வித்து இருந்தோம். இனி 2 நாட் களுக்கு ஒரு முறை கோவை மக்க ளுக்கு தண்ணீர் கிடைக்கும்.
தற்போது கோவையில் நபர் ஒரு வருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடை க்கும். கோவை மட்டுமின்றி தமிழ கம் முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கொண்டு செல்வதே இலக்காக செயல்படுகின்றோம். தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. நகரங் களை நோக்கி வருபவர்கள் அதிக மாகி வருகின்றனர். 2035-இல், 2050-இல் எவ்வளவு மக்கள் தொகை இருக்கும் என்பதைக் கணக்கில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகை யில், தமிழகம் சீரான வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.
அனைத்து நகரங்களும் வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன. இதைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் வித்தியாசம் தெரியும். இந்தியா வின் நம்பர் 1 முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். கடந்த 5 வரு டத்தில் ரூ. 6 லட்சம் கோடி வரியாக ஒன்றிய அரசுக்கு கொடுத்து இருக் கின்றோம். ஆனால், அவர்கள் ரூ. 1.58 லட்சம் கோடி மட்டுமே நமக்கு வழங்கியுள்ளனர். ஒரு ரூபாய் கொடுத்தால் 29 காசு மட்டுமே திருப்பி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் நலனை, உரிமையைப் பாதுகாக்க அடுத்த வரும் இரண்டு மாதங்கள் மிக முக்கியமான காலம். சென்ற முறை (2021 சட்டமன்றத் தேர்த லில்) சிறுசிறு தவறுகள் நடந்து இருந் தாலும், அதை (2024 மக்களவைத் தேர்தலில்) சரி செய்ய வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.