districts

img

”நான் வணங்கும் கடவுளே வேல் ஏந்தும் போது” அடிகளார் நூற்றாண்டு கருத்தரங்கில் பேச்சு

கோவை, செப்.28- வன்முறையால் அதிகாரத்தை கைப் பற்ற வேண்டும் என மார்க்ஸ் எப்போதும் சொன்னதில்லை, ஆனால், அநீதிக்கெதி ராக, நான் வணங்கும் கடவுளே வேல் ஏந்தும் போது, அது தவறில்லை என மார்க்சியத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவராக குன்றக்குடி அடிகளார் திகழ்ந்தார் என கோவையில் நடைபெற்ற குன்றக்குடி அடிக ளார் நூற்றாண்டு கருத்தரங்கில் தலை வர்கள் உரையாற்றினர்.  கோவையில், மக்கள் சிந்தனை மேடை யின் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற் றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தவத்திரு பொன்னம்பல அடிகளார், எழுத்தா ளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கருத்து ரையாற்றினர்.  இதில், பாரதி கிருஷ்ணகுமார் பேசுகை யில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிக ளில் திருவள்ளுவர் பேரவை நிறுவி, வள்ளு வத்தை தமிழ் சமூகம் அறிய காரணமாக இருந்தவர் குன்றக்குடி அடிகளார். பட்டிமன் றங்களில் நடுவராக இருந்து தீர்ப்பு சொல்லும் போது மார்க்சியத்தின் பக்கம் நின்று தீர்ப்ப ளித்தவர். ஒருமுறை மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பட்டி மன்றத்தின் தலைப்பு மனித குல சிக்கல்களை தீர்ப்பது மார்க்சிமா? காந்தியமா? என்பது. அப்போது அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. காந்தியமே என்ற தலைப்பில் நான்கு பேரும் மார்க்சியமே என்ற தலைப்பில் நான்கு பேரும் பட்டிமன்றத்தில் தங்களது கருத்துக்களை பேசினர். ஒரு கட்டத்தில் காந்தியமே என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் ஒருவர், தத்துவார்த்தரீதி யாக கருத்துக்களை முன்வைப்பதற்கு பதி லாக, மார்க்சியம் என்றால் வன்முறை, காந்தி யம் என்றால் அகிம்சை என்று ஒரு புள்ளி யில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். சாமி அவர்கள் அகிம்சை விரும்புகிறாரா? அல்லது வன்முறையை விரும்புகிறாரா? என்று கேள்வி எழுப்பி, சாமி வன்முறையை விரும்பி னால் மார்க்சியம் என்று தீர்ப்பளிக்கட்டும். அகிம்சையை விரும்பினால் காந்தியமே என்று தீர்ப்பளிக்கட்டும் என்றார்.  அதற்கு அடிகளார் இதுபோன்ற ஒரு கேள்வியை இதுவரை யாராவது கேட்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தேன். தற்போது நீங்கள் கேட்டு விட்டீர்கள் எனக் கூறி, நான் வணங்கும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்வதற்கு வேல் ஏந்தினார். நான் வணங்கும் கடவுளே வேல் ஏந்தும் போது, நான் ஏந்துவதில் தவறில்லை. ஆனால், சாமி வம்பு சண்டைக்கு போகாது வந்த சண்டையை விடாது, எனக்கூறி, மார்க்ஸ் ஒருபோதும் வன்முறையால் அதிகா ரத்தை கைப்பற்றலாம் என்று எங்கும் கூற வில்லை. சமூக மாற்றத்தை விரும்பாத வர்கள் வன்முறையை கையில் எடுக்கும் போது அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தான் கூறினார் என்று விளக்கம் சொன்னதோடு, அன்றைய பட்டிமன்றத்தின் இறுதியில் மார்க்சியமே என்று தீர்ப்பளித்தார். இதேபோல, குன்றக்குடி ஆதீனத்திற்கு பொறுப்பேற்ற சமயத்தில், புதிதாக பொறுப் பேற்கும் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து ஊர்வலமாக தூக்கிச் செல்வது வழக்கம், அப்படி குன்றக்குடி அடிகளார் ஆதீ னமாக பொறுப்பேற்ற போது அவரை பல்லக் கில் அமர வைத்து ஊர்வலமாக தூக்கிச் செல் வதற்கு ஊரே திரண்டு நின்றது. அச்சமயத் தில் ஒரு மனிதனை சக மனிதன் பல்லக்கில் தூக்கிச் செல்வது முறையானது அல்ல எனக் கூறி, பல்லக்கில் அமர மறுத்து விட்டார்.  அன்று தொடங்கி அவர் இறக்கும் வரை யிலும் அவர் பல்லக்கில் அமரவே இல்லை. தமிழகத்தில் சாதி மத மோதல்கள் எங்கெல் லாம் நடைபெற்றதோ அங்கே சென்று மக்களை ஒற்றுமை படுத்துவதில் உறுதி யோடு களமாடியவர் அடிகளார் என்றார்.