districts

img

குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் சிறப்பு பரிசு

உதகை, ஜூன் 27- குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களி டம் வழங்கினால், சிறப்பு பரிசு கொடுக் கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட் சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு  வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதால் குப் பைக்குழியில் கொட்டுகையில் ஊழி யர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கி றது. தூய்மை பணியாளர்கள் சிரமம டைந்து வருகின்றனர்.  இதை தவிர்க்கும் வகையில் குன் னூர் நகராட்சி சார்பில், “என் குப்பை,  என் பொறுப்பு” என பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா ளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற  துணைத்தலைவர் வாசிம்ராஜா, நகர் நல அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் மணி மற்றும் துப் புரவு ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும், உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை தனியாக வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத் தினர். மேலும் தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. முன்னதாக, தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத் துக்கொண்டனர். இதேபோல், உதகை நகராட்சிக் குட்பட்ட 7 ஆவது வார்டு பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நகரமன்ற உறுப்பி னர் விசாலாட்சி தலைமையில், நக ராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற் றும் நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி  முன்னிலையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளை  சேர்ந்தவர்கள் மற்றும் மாணவ, மாண விகள் கலந்து கொண்டு பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்தனர்.