districts

img

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க திருப்பூரில் சிறப்பு நீதிமன்றம்

திருப்பூர், ஜூலை 10- எஸ்சி, எஸ்டி சாதிய வன்கொடுமை வழக் குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன் றத்தை திருப்பூர் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் திருப்பூர் மாவட்ட நான்காவது மாநாடு வெள்ளகோவிலில் ஞாயிறன்று நடைபெற் றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப் பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கை முன்வைத்து மாவட்ட செயலாளர் ச.நந்த கோபால், வரவு செலவு அறிக்கையை முன் வைத்து பொருளாளர் பஞ்சலிங்கம் ஆகி யோர் பேசினர். இந்த மாநாட்டை வாழ்த்தி  தலித் விடுதலை இயக்க தலைவர் ச.கருப் பையா, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சண்.முத்துக்குமார், திரா விடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் முகில் ராசு, பொல்லான் பேரவை நிர்வாகி வடிவேல் ராமன், ஜனநாயக மாதர் சங்க  மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி, வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் செ. மணிகண்டன், சிஐ டியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.சம் பத், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலை வர் சா.பிரவீன் குமார் உள்ளிட்டோர் பேசி னர்.

இதில், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண் டும். திருப்பூர் முதலிபாளையம் தாட்கோ வில் சிதிலமடைந்து கிடக்கும் தொழிற்சாலை கட்டிடங்களை சீரமைத்து பட்டியல் இன  இளைஞர்களுக்கு வங்கிக் கடன் உதவியு டன் தொழில் தொடங்க ஏற்பாடு செய்ய வேண் டும். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி வன் கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த வழக்குகளுக்கு திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையில் சிறப்பு காவல் பிரிவு  மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும். சாயக்கழிவு, மலக்குழி, பாதாள சாக்கடை  மற்றும் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி  சுத்தம் செய்வதை தடுக்கும் விளம்பரங்கள் பரவலாக செய்யப்பட வேண்டும். இப்பணி களில் இயந்திரங்களை பயன்படுத்த விழிப் புணர்வு ஏற்படுத்துவதுடன், மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முழுவதும் பட்டியல் இன  மக்களுக்கான மயானத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவராக ச.நந்த கோபால், மாவட்டச் செயலாளராக சி.கே.கனகராஜ், மாவட்ட பொருளாளராக அ. பஞ்சலிங்கம், துணைத் தலைவர்களாக எஸ். சண்முகம், முருகசாமி, பாலகிருஷ்ணன், செல்லமுத்து, சாந்தி ஆகியோரும், மாவட் டத்துணைச்செயலாளர்களாக சி.பானுமதி, பா.ஞானசேகரன், பிரவீன் குமார், வழக்கறி ஞர் அமர்நாத், ரமேஷ் உள்ளிட்ட  50 பேர்  கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட் டது. மாநாட்டின் முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் நிறைவுறை யாற்றினார். இந்த மாநாட்டில் வெள்ள கோயில் ஒன்றியம் நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இனத் தைச் சேர்ந்த கவிதா பாராட்டப் பெற்றார். இம்மாநாட்டில் சுமார் 200 பேர் பங்கேற்ற னர். வரவேற்பு குழு செயலாளர் ராதாகிருஷ் ணன் நன்றி கூறினார்.