districts

img

ஆடுகள் இழப்புக்கு விரைவில் நிவாரணம்: அமைச்சர் உறுதி

திருப்பூர், பிப். 17 – சென்னிமலை அருகே ஒரு தோட்டத்தில்  தெருநாய்கள் புகுந்து கடித்துக் குதறியதில்  10 ஆடுகள் உயிரிழந்தன. 5 ஆடுகள் கவ லைக்கிடமான நிலையில் உள்ளன. இதற்கு எதிராக விவசாயிகள் சென்னிமலை சாலை யில் திங்களன்று மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் விவசாயிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் முத்துச்சாமி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர் வாகங்கள் மூலம் இழப்பீடு வழங்க சில நாட்க ளில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று உறு தியளித்தார். இரு மாவட்ட கிராமப்புறங்களில் தெரு  நாய்கள் கடித்து இதுவரை ரூ.70 லட்சம்  மதிப்புள்ள ஆடுகள் பலியாகி இருக்கும்  என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள் ளனர்.