districts

தியாகி குமரன் காலனியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி சிபிஎம் மனு

திருப்பூர், நவ.16- திருப்பூர் மாநகராட்சி, 1 ஆவது வார்டு, தியாகி குமரன் காலனியில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் ஊர்ப் பொது மக்களுடன் மண் டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.  திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளை யம் முதலாவது மண்டல அலுவலகத்தில் புத னன்று, மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன் றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், ஒன்றி யக்குழு உறுப்பினர் கோபால், தியாகி குமரன் காலனி கிளை செயலாளர் ராஜாமணி மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதில், தியாகி குமரன் காலனி 1ஆவது மற்றும் 2ஆவது வீதிகளில் 20 வருடத்திற்கு மேலாக தார் சாலை மற்றும் வடிகால் வசதி  செய்து தரக்கோரி பல முறை மனு அளிக்கப் பட்டுள்ளது. இதுவரை எவ்வித நடவடிக் கைகளும் மேற்கொள்ளவில்லை. இந்த சாலை முழுவதும் குண்டும், குழியு மாக மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. அப்பகுதி பொது மக்கள், குழந்தைகள் வாகனத்தில் செல்பவர்கள் மிக வும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பள்ளிக்கு  செல்லும் குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்.

சாக்கடை கால்வாய் முதல் வீதி யில் தோராயமாக 40 மீட்டர் அளவில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதை இரண்டு வீதி களிலும் இருபுறமும் முழுமையாக அமைத்து தர வேண்டும். பள்ளிவாசல் பிரதான சாலையில் சுமார் 25  வருடங்களுக்கு முன்பு சிமெண்ட் குழாய் களால் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வா யில் இப்பொழுது பழுது ஏற்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து அடைப்பு ஏற்படுகிறது. சாக்கடை நீர் செல்வது இல்லை. எனவே அதை புதுப்பித்து காங்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும். பிரியங்கா நகர் மேற்கில் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து  வருகின்றன. அந்தப் பகுதியில் சாலை குண்டு, குழியுமாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த சாலையில் செல்லும்போது மழை காலங்களில் வாக னங்கள் சிக்கிக் கொள்கிறது. எனவே உடன டியாக அந்த சாலையை சரி செய்து புதுப் பித்து தார் சாலை அமைத்து தர வேண்டும். அத்துடன் ஜெ.ஜெ.நகர் பகுதி முழுவதும் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர்  பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்ட னர்.