ஈரோடு, டிச.31- தீக்கதிர் செய்தி எதிரொலியாக பழைய திண்டல் கிராம ஊராட்சிக்குட் பட்ட பகுதியில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைக ளுக்கு தீர்வு காணப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காரப் பாறை, புதுக்காலனி, சின்னமேடு, மெடிக் கல் நகர், பிகேஎன் நகர் மற்றும் பங் காரு நகர் ஆகியவை பழைய திண்டல் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளா கும். இங்கு குடிநீர் பிரச்சனை, சாலை, சாக்கடை மற்றும் கழிப்பிடம் ஆகிய அடிப்படை பிரச்சனைகள் செய்து தரப் படாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து அண்மையில் தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியா னது. இதனைத் தொடர்ந்து செவ்வா யன்று அப்பகுதியில் பழுதடைந்த சாக் கடைகள் சீரமைக்கப்பட்டது. குண்டும் குழியுமான சாலைகள் புனரமைக்கப் பட்டது. வடிகால் வசதிகள் மேம்படுத் தப்பட்டது. அத்துடன் மெடிக்கல் நகரில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் புதர், புல் பூண்டுகள் அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்த னர்.