districts

img

தனிநபர் ஆக்கிரமித்த நிலம் மீட்பு - மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் தீர்வு

உடுமலை, டிச. 13- ஆதிதிராவிடர் மக்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் 20 ஆண்டுகாலமாக ஆக்கி ரமித்து வைத்திருந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர்ச்சி யான போராட்டத்தையடுத்து, புத னன்று வருவாய்த்துறை அதிகாரி கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த  கட்டடங்களை இடித்து நிலத்தை மீட்டனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் வட்டம் ஜோத்தம்பட்டி கிரா மம் அண்ணா குடியிருப்பில் ஆதிதி ராவிட நலத்துறையால்79 மனையி டங்கள் பிரிக்கப்பட்டு ஆதிதிரா விட மக்களுக்கு வழங்கப்பட்டது.  அங்கு ஆதிதிராவிட மக்கள் வீடு கள் கட்டி குடியிருந்து வருகின்ற னர். இவ்விடத்தில், பொதுமக் களின் பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் இருபது ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்.  இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கணியூர் கிளையினர் பொது மக்களைத் திரட்டி ஆக்கி ரமிப்பை அகற்ற வேண்டும் என  பலமுறை கோரிக்கை மனு அளித்த னர். அதிகாரிகள் தொடர்ந்து அலட் சியம் காட்டியே வந்தனர். இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின்  மடத்துக்குளம் தாலுகாகுழு உறுப் பினர் எம்.எம். வீரப்பன் தலைமை யில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  இரண்டு முறை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆதிதி ராவிடர் மக்களுக்கு சொந்தமான பொது இடத்தை மீட்காவிட்டால், பெரும் போராட்டம் நடைபெறும்  என மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனை யடுத்து, கடந்த 6ஆம் தேதி எம்.எம்.வீரப்பன் தலைமையில் தொடர் காத்திருக்கும் போராட்டத்தை துவக்கினர்.

பிரச்சனையின் தீவி ரத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு  விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தை யின் போது, ஆக்கிரமித்துள்ள நிலத்தை உடனடியாக மீட்போம் என்கிற உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக, மடத்துக்குளம் வருவாய்த்துறையும், ஆதிதிரா விட நலத்துறையும், இணைந்து, புத னன்று ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கட்டடங்களை பொக்லைன்  இயந்திரத்தை கொண்டு இடித்து,  நிலத்தை மீட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் இடைவிடாத தொடர்ச் சியான போராட்டத்தின் விளை வாக தலித் மக்களுக்கு ஒதுக்கப் பட்ட பொது இடம் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஜோத்தம்பட்டி கிராம மக்கள் கூறுகையில், எங்க ளுக்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தை தனிநபர் ஒருவர் 20 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து அனுபவித்து கொண்டிருந்தார். இவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக எங்களால் இப்பிரச்ச னையில் தலையிட முடியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை உள்ளது என இந்த கனியூர் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தவுடன், உடனடியாக இடத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். தொடர்ச்சியாக முற்றுகை, மறியல் என அடுத்தடுத்து போராட்டம் நடத்தியதால், அதிகாரிகள் இப் போது நடவடிக்கை எடுத்து ஆக்கிர மிப்பை அகற்றி மீட்டுக்கொடுத்துள் ளனர். கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்துக் காரங்களுக்கு நன்றி என்றனர் உளப்பூர்வமாக.