districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள்

உதகை, ஜன.18- காட்டுத்தீ, வன குற்றங்களை கண்டறிய சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி  கேமராக்கள், முதுமலையில் 9 இடங்களில் வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலி கள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப் பளவு கொண்டது. காட்டுயானைகள், புலி கள், மான்கள், செந்நாய்கள், கரடிகள்,  காட்டெருமைகள் உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சந்தனம், தேக்கு உட் பட விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. முதுமலையையொட்டி கர்நாடகா, கேரளா வனங்களும் உள்ளதால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று பல இடங்களில் வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதில், வன ஊழியர்கள் இரவு, பகலாக  கண்காணித்து வருகின்றனர். இருப்பினும்  வனப்பகுதியை முழுமையாக கண்காணிக் கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின் றனர். அதேபோல் ஆண்டுதோறும் கோடை  காலத்தில் வறட்சியான காலநிலை நிலவும்  சமயத்தில் காட்டுத்தீ பரவுகிறது. தாமத மாக கிடைக்கும் தகவலால் காட்டுத்தீ வேகமாக பரவி வனம் எரிந்து விடுகிறது.  இந்நிலையில், வனத்தில் காட்டுத்தீ பரவு வதை உடனடியாக கண்டறிந்து தடுக்கவும்,  வனப்பகுதியில் வன குற்றங்கள் நிகழாமல்  தொடர்ந்து கண்காணிக்கவும் முதுமலையில்  9 இடங்களில் சூரிய சக்தியில் செயல்படும்  தானியங்கி உயர் கோபுர கேமராக்களை  வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.  இவை முதுமலை தெப்பக்காடு கண்கா ணிப்பு மையத்துடன் இணைய வழியாக  இணைக்கப்பட்டுள்ளது. அங்கு கேமராக்கள்  அனுப்பும் காட்சிகளை வனத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகை யில், முதுமலை வனப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்க பல இடங் களில் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. தற்போது சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி கேமராக்கள் 9  இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. வேட்டை உட்பட வன குற்றங்கள் நிகழாமல்  தடுக்க தானியங்கி கேமராக்கள் பயன்பாட்டு  கொண்டு வரப்பட்டு இருக்கிறது, என்றனர்.

அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:45.60/60அடி  நீர்வரத்து:818கன அடி வெளியேற்றம்:882கன அடி அமராவதி அணை  நீர்மட்டம்: 81.76/90அடி. நீர்வரத்து:134கனஅடி வெளியேற்றம்:910கன அடி

தண்ணீரில் கொட்டப்பட்ட 100 மூட்டை அரிசி

உதகை, ஜன.18- எமரால்டு அருகே உள்ள அண்ணா நகர் சுருக்கி பாலத்தின் தண்ணீரில் 100க்கும் மேற் பட்ட அரிசி மூட்டைகள் கொட்டப்பட்டு கிடந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. சமீபத்தில் அரிசி உள்ளிட்ட  பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே தமிழ் நாட்டின் எல்லையோர மாவட்டங்களி லிருந்து கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங் களுக்கு ரேசன் அரிசி அதிகளவில் கடத்தப் படுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்து வரு கிறது. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.  இந்நிலையில் நீலகிரி மாவட்டம், உத கையை அடுத்த எமரால்டு அணைப்பகுதி யில் இருந்து எமரால்டு வேலி செல்லும் பகுதியில் உள்ள அண்ணாநகர் சுருக்கி  பாலம் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள்  தண்ணீரில் கொட்டப்பட்டு கிடந்தது. 25  கிலோ பைகள் அடங்கிய சுமார் 100 மூட்டை  கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குந்தா வட்டாட் சியர் இந்திரா மற்றும் எமரால்டு காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத் தினர். இதுகுறித்து வழங்கல் துறையினர் கூறு கையில், அணையிலிருந்து மீட்கப்பட்ட அரிசி ரேசன் அரிசி தானா? என்று உறுதி யாக தெரியவில்லை. இந்த அரிசி கொட்டப் பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கலாம். அதனால் தண்ணீரில் நன்றாக ஊறிப்போய்  உள்ளது. கடந்த ஒரு மாதமாக அணையில்  தண்ணீர் அதிகமாக இருந்ததால் தெரியாமல்  இருந்துள்ளது. தற்போது கடந்த சில நாட் களாக மழை குறைந்து இருப்பதால்,  அணையில்  தண்ணீர் குறைந்ததையடுத்து  இங்கு அரிசி கொட்டப்பட்டு இருப்பது  தெரியவந்து உள்ளது. மேலும், தமிழகத்தில்  சணல் பைகள் மூலம் தான் ரேசன் அரிசி விநி யோகம் நடைபெற்று வருகிறது. இந்த அரிசி  மூட்டைகள் உரத்திற்கு பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக் பைகளால் கட்டிக் கொண்டு  வரப்பட்டுஉள்ளது. ஆனாலும், அரிசியை  மீட்டு குன்னூரில் உள்ள ஆய்வகத்திற்கு  சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது, என்றனர்.

வெள்ளக்கோவிலில் குடிநீரில் விஷம்?  கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு

திருப்பூர், ஜன.18 - வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட திருமங்கலத் தில் குடிநீருக்கு பயன்படுத்தி வந்த பொதுக்கிணற்றில் விஷம்  கலக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர் பாக கணவன், மனைவி இருவர் மீது காவல் துறையினர் வழக் குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமங்கலத்தில் அப்பகுதி மக்கள் குடிநீர் பயன்பாட்டுக் காக பொதுக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து  மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர் கிராம  மக்கள் அனைவராலும் குடிப்பதற்கும், சமையல் உள்ளிட்ட  வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.  இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ப வர், வழக்கம் போல காலை கிணற்று மோட்டாரை இயக்க  வந்தபோது, கிணற்றுக்கு அருகில் வசிக்கும் சண்முகம் (59),  அவரது மனைவி பத்மாவதி (55) இருவரும் ஒரு டப்பாவிலி ருந்து திரவத்தை கிணற்றில் வீசியுள்ளதாக கூறியுள்ளார்.  அதை எடுத்துப் பார்த்ததில் அது விஷ மருந்து எனத்  தெரிந் ததாகவும், மேலும் அந்த கிணற்றில் அழுகிய காய்கறிகள், வேறு சில பொருட்களும் கிடந்ததாக மகேந்திரன் கூறியுள் ளார். இது குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில்  புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், சண்முகம்,  பத்மாவதி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள னர். மேலும் அந்த கிணற்று நீரை ஆய்வுக்கு அனுப்பி இருப்ப தாகவும், ஆய்வு முடிவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் காவல் துறை வட்டாரத்தினர் தெரிவித் துள்ளனர்.

குறைதீர்க் கூட்டம்

திருப்பூர், ஜன.18– திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசா யிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டம் வரும் 24ஆம் தேதி  காலை 11 மணிக்கு திருப்பூர்  சார் ஆட்சியர் தலைமையில்  சார் ஆட்சியர் அலுவலக  கூட்ட அரங்கில் நடைபெறும். விவசாயிகள், பொது மக் கள் பங்கேற்று பயன் பெறு மாறு சார் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் கூறியிருக் கிறார்.திருப்பூர், ஜன.18– திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசா யிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டம் வரும் 24ஆம் தேதி  காலை 11 மணிக்கு திருப்பூர்  சார் ஆட்சியர் தலைமையில்  சார் ஆட்சியர் அலுவலக  கூட்ட அரங்கில் நடைபெறும். விவசாயிகள், பொது மக் கள் பங்கேற்று பயன் பெறு மாறு சார் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் கூறியிருக் கிறார்.

அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:45.60/60அடி  நீர்வரத்து:818கன அடி வெளியேற்றம்:882கன அடி அமராவதி அணை  நீர்மட்டம்: 81.76/90அடி. நீர்வரத்து:134கனஅடி வெளியேற்றம்:910கன அடி

பெண்களை இழிவுபடுத்திய துக்ளக் குருமூர்த்தி

கோவை, ஜன.18- பெண்களை இழிவு படுத்திய துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறு மலர்ச்சி இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன், மாநில பெண் கள் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவ ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 14 ஆம்தேதி நடந்த துக்ளக் இதழின் விழாவில்  ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிகழ் வில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட் டால் தகுதி இல்லாதவர்கள் வந்து விடுவார்கள் என்பதால் இது சரியல்ல என்ற கருத்தை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வாய்ப்பு தராமல் முடக்கி வைத்து விட்டு அவர்களை தகுதி  இல்லாதவர்கள் என்று சொல்வது பெண்களை இழிவுபடுத்து வதாக கருதுகிறோம். மேலும், தற்போது பெண்களும் லஞ்சம்  வாங்க பழகி விட்டதாகவும், இந்த நிலைக்கு நாம் அவர் களை கொண்டு வந்து விட்டோம் என்றும், இதனால் நம் பண்பா டும் கலாச்சாரமும் பாதிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித் துள்ளார். பெண்கள் வேலைக்கு செல்வது குருமூர்த்தி போன்ற ஆட்கள் போட்ட பிச்சை அல்ல; அது அவர்களின் உரிமை ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு குலத்தொழில் என்று  முடிவு செய்திருந்ததைப் போல பெண்களுக்கு அடுப்படி தான் கதி என்பதை போலவும் அதை விட்டு அரசியலுக்கு வந்தால் இந்த நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் அழிந்துவிடும் என் றும் ஒரு ஒன்றிய அமைச்சரை வைத்துக் கொண்டு பேசியது பெண்களை மிகவும் கேவலப்படுத்தி உள்ளது.  பெண்களை இழிவுபடுத்தி பேசிய துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி மீது மாநில மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள் ளார்.

கத்தியை காட்டி வாலிபரிடம் வழிப்பறி

கோவை, ஜன.18- போத்தனூர் ரயில் நிலையம் அருகே வாலிபரிடம் அடை யாளம் தெரியாத நபர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடு பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரியை சேர்ந்தவர் அபிமணி (37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பயிற்சியாள ராக வேலை செய்து வருகிறார். இவர் போத்தனூர் ரயில் நிலை யம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையா ளம் தெரியாத 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அபிமணி யின் அருகில் வந்துள்ளார். அப்போது, அந்த வாலிபர்கள் “அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும்” அபிமணியிடம் செல்போன் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர்களி டம் அபிமணி செல்போனை கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட அந்த வாலிபர்கள் திடீரென அவர்கள் மறைத்து வைத் திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அபிமணி தன்னிடம் பணம் இல்லை என்றுள் ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், அபிமணி யின் பாக்கெட்டிலிருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அபிமணி அளித்த புகாரின்பேரில் போத்த னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

உதகை, ஜன.18- கோத்தகிரியில் செவ்வாயன்று மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற் றது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன் னிட்டு கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 11 ஆவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சென்னை, கோவை  என பல மாவட்டங்களுக்கு இடையேயான  கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றன. இறுதிப் போட்டியானது செவ்வாயன்று இரவு நடை பெற்றது. இதில் சென்னை - நெல்லை கண் ணன் அணியும் மோதின. இந்த போட்டியில் 19 - 24 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், நெல்லை கண்ணன் அணிக்கு 2 ஆம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், 3 ஆம் இடம்பெற்ற விவி  பிரதர்ஸ் அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங் கப்பட்டது.

வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கோவை, ஜன.18- பருவமழை குறைந்துள்ள நிலையில்,  பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தென் னைக்கு அடுத்தப்படியாக, மானாவாரி பயிர் களான நிலக்கடலை, தட்டைபயிர், சோளம் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப் படுகிறது. இதில் பல கிராமங்களில் விவசாயி கள் வாழை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை  சாகுபடி செய்யப்படுகிறது. ஆழியார், கோட் டூர், சந்திராபுரம், சேத்துமடை, கோமங்கலம், சரளபதி உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு  வருடமும் பருவமழை பெய்யும்போது  வாழை சாகுபடி செய்யப்படுகிறது. கடந் தாண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து  பெய்ததால், பல்வேறு கிராமங்களில் வாழை  சாகுபடியை, விவசாயிகள் பலர் சுழற்சி முறை யில் மேற்கொண்டனர். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து அண்மையில், பல்வேறு இடங்க ளில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. வடக்கிபாளையம், சூலக்கல், பொன்னாயூர், சேத்துமடை, சமத்தூர் உள்ளிட்ட பல இடங் களில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் தற் போது செழித்து வளர ஆரம்பித்துள்ளது. ஒவ் வொரு ஆண்டும் பனிக்காலத்தில் வாழைகள் தாக்கு பிடிக்க முடியாமல் வாடி வதங்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால், இந்த முறை  வாழைகள் செழித்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிகள் அமல்

ஈரோடு, ஜன.18- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு  கூட்டணியில் காங்கி ரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு திரு மகன் ஈவெரா வெற்றி பெற்றார். இளம் வயது சட்டமன்ற உறுப்பினரான இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச் சருமான இவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார். கடந்த 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக  கூட்டணி வேட்பாளர் யுவராஜாவை விட 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியா சத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற் றார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி  மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்  மறைந்ததையொட்டி ஈரோடு கிழக்கு  சட்டப்பேரவை தொகுதி காலியாக உள் ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் னர் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், வரும் பிப் ரவரி 27 ஆம் தேதி வாக்கு பதிவு, மார்ச்  2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் என தேர்தல் ஆணையம் புத னன்று அறிவித்தது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இத னையடுத்து, இந்த சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங் களில் மாட்டப்பட்ட தமிழக முதல்வர்  படம் உள்ளிட்டவைகள் அகற்றப்பட் டது. தேர்தல் நடத்தும் அலுவலராக நக ராட்சி ஆணையர் சிவக்குமார் அறிவிக் கப்பட்டுள்ளார்.

முதியவர் பலி

கோவை, ஜன.18- கணபதி அருகே தேங் காய் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர், தவறி விழுந்து பரி தாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம், கண பதி, மணியகாரம்பாளையம் அருகே உள்ள முல்லை நகர்  பகுதியை சேர்ந்தவர் ராஜேந் திரன் (61). இவர் தனது வீட் டின் அருகே உள்ள தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப் போது திடீரென அவர் மரத்தி லிருந்து தவறி கீழே விழுந் தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந் திரனை மீட்டு மருத்துவம னையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு  அவர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவை சிறை கைதி உயிரிழப்பு

கோவை, ஜன.18- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தார். நாகைப்பட்டினத்தை சேர்ந்தவர் சரவணன் (49). இவர் கோத்தகிரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து சிறைத்துறை காவல்  துறையினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பந்தையசாலை காவல் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்து வமனைக்கு வந்த காவல் துறையினர், சரவணன் உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியம்மையால் 500 மாடுகள் பாதிப்பு

சேலம், ஜன.18- சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியம்மை நோய் தாக்குதலால் 500க்கும் மேற் பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், வாழப்பாடி, முத்தம்பட்டி உள்ளிட்ட பகு திகளில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் வேக மாக பரவி வருவதாக தெரிகிறது. இதனால் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை.  இதனால் தற்போது பெரியம்மை நோய் மாடுகளை தாக்கி வரு கிறது. இந்த நோய் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது. மாட்டு பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி அதற்கு பூஜை செய்ய கூட முடியவில்லை. எனவே, கால்நடை களை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். இந்த நோயின் தாக்கம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை சேலம் மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன் கூறுகையில், விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் மாடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்  வருவதில்லை. சேலம் மாவட்டத்தில் பெரியம்மை நோய்க் காக 2 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.  கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பாதிப்பு  உள்ள பகுதிகளில் தற்போது தடுப்பூசி வழங்கி வருகிறோம். அப்படி பெரியம்மை நோய் தாக்கியதாக அந்தந்த பகுதி கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தால் தடுப்பூசி போட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாடு: நடப்பாண்டில் ரூ.28 லட்சம் அபராதம்

உதகை, ஜன.18- நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ் டிக் பொருட்களை பயன்படுத்திய தற்காக நடப்பாண்டில் மட்டும் ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி  எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்க ளின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. ஆனால், நீலகிரியின் சுற் றுச்சூழலை கணக்கில் கொண்டு அதற்கு முன்னரே மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. ஆனா லும், சுற்றுலா பயணிகளின் வரு கையால் பிளாஸ்டிக் குடிநீர் பாட் டில்கள் அதிகம் இருந்ததால் நீல கிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர், 2 லிட் டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்க ளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரி மாவட்டத்தில் ஓரளவு குறைந் தாலும், தற்போது வரை பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், நீல கிரி மாவட்ட எல்லைகளில் அமைந்து  உள்ள கல்லார், பர்லியார், குஞ்சப் பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளுர், சோளாடி, பாட்டவயல், நம்பி யார் குன்னு,

கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங் களிலிருந்து வரும் வாகனங்களில் சோதனை செய்யும் பணிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. மேலும் அரசு பேருந்துகளில் கடந்த சில நாட் களாக பிளாஸ்டிக் பொருட்கள்  கொண்டு வரப்படுகிறதா? என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் எடுக் கப்பட்ட தொடர் நடவடிக்கை காரண மாக 80 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன் பாடு குறைந்துள்ளது. ஆனாலும், நீல கிரி சுற்றுலா பகுதி என்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர் நாடகா உள்பட வெளி மாநிலங்க ளில் இருந்து வருபவர்கள் தெரியா மல் பிளாஸ்டிக்குகளை கொண்டு  வந்து விடுகின்றனர். அதன்மூலம் ஒரு 20 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறது. அதையும் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் மாவட்ட எல் லைகளில் 15 இடங்களில் பிளாஸ்டிக் ஒழிக்க தனியாக சோதனைச்சாவடி கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் அங்கேயே பறிமுதல் செய்யப்படுகின்றன. இதேபோல் பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தியதற்காக 2020 ஆம்  ஆண்டு ரூ.24.93 லட்சம், 2021 ஆம்  ஆண்டு ரூ.12.50 லட்சம், நடப்பாண் டில் மட்டும் இதுவரை ரூ.28 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை நிதியிலிருந்து பிளாஸ் டிக் ஒழிப்புக்கு நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.