நாமக்கல், 28- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக மேல்தளத்தில் 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் சக்தி அமைப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வெள்ளியன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முக மையின் மூலம் மரபுசாரா எரிசக்தி யினை மேம்படுத்தும் திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி பயன்பாட்டினை அதிகப்படுத் தவும், மரபுசாரா எரிசக்தி பயன்பாடு கள் குறிப்பாக, சூரிய மின்சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனங்களை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் TEDA – RESCO திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு சூரிய மின்சக்தி திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக மேல்தளத்தில் TEDA - RESCO இத்திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வெள்ளியன்று திறந்து வைத்தார்கள். இந்த சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் இயங்குவது மட் டும் அல்லாமல் மீதமுள்ள மின்சார மானது மின்வாரியத்திற்கு அனுப்பி சேமிக்கப்படுகிறது. எனவே, இந்த சூரிய சக்தி அமைப்பினை ஏற்படுத்தும் அரசு அலுவலங்களில் மின்சார மானது சேமிக்கப்படுவதோடு மின்சார கட்டணமானது குறைகிறது. இத்திட் டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் 50 கிலோ வாட் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துகழகம் (TNSTC) நாமக்கல் – 15 கிலோ வாட் ஆகிய அலுவலகங்களில் முன்மாதி ரியாக இத்திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் ந.கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.சிவசுப்ரமணியன், தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிப்பொறியாளர் வெ.புவனேஸ் வரி உட்பட அரசுத்துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.