எ.வ.வேலு தகவல் உதகை, டிச.16- கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவை தடுக்க மண் ஆணி பொருத்தும் தொழில்நுட் பத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவ தாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித் துள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை அருகே கனமழையால் மண்சரிவு ஏற் பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் அதிகாரி களுடன் வெள்ளியன்று ஆய்வு செய் தனர். இதன்பின் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் அண்மை யில் பெய்த கனமழை காரணமாக மேட் டுப்பாளையம் - குன்னூர் சாலை, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை பாதிக்கப்பட்டது. கோத்த கிரி பகுதியில் அக்.23 ஆம் தேதியன்று 37 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால், 8 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யின் துரித நடவடிக்கையால் 9 மணி நேரத்தில் சாலைகள் சீர்செய்யப் பட்டு வாகனப் போக்குவரத்து தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த சாலை யோரங்களில் நிரந்தர தடுப்புச்சுவர் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண் சரிவை தடுக்க மண் ஆணி பொருத்தும் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இத னால் அந்த இடங்கள் கடந்த 2 ஆண் டில் பருவமழையை தாங்கி நிலைத் துள்ளன. இதேபோல கோத்தகிரி - மேட்டுப் பாளையம் சாலை, கேத்தி - பாலாடா சேலாஸ் சாலை, உதகை, அவ லாஞ்சி - குந்தா சாலை, குன்னூர் - கட் டபெட்டு சாலை ஆகிய இடங்களி லும் ரூ.2 கோடி மதிப்பில் மண் ஆணி பொருத்தும் இந்த தொழில்நுட் பத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அதற்கான பணி விரை வில் தொடங்கப்படவுள்ளது. மேலும், உதகையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான மண் வள நிறுவன அதி காரிகள் தில்லியுடன் தொடர்பு கொண்டு மண் அரிப்பைத் தடுக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டறிய அறிவுறுத்தப்படுவார்கள், என்றார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலை கள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை பொறியாளர்கள் சந் திரசேகர், கீதா, முருகேசன், நெடுஞ் சாலைத்துறை கோவை கோட்டப் பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகி யோர் கலந்து கொண்டனர்.