திருப்பூர், அக்.2 - அண்ணல் காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்தனர். மேலும் சமூக நல்லிணக்க மதச்சார்பின்மை பாது காப்பு உறுதிமொழி ஏற்றனர். திருப்பூரில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பி.ஆர்.கணேசன் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் தலைமையில் எழுத்தாளர்கள் கலைஞர்கள், ஆர்வலர்கள் மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து சமூக நல் லிணக்க உறுதிமொழி ஏற்கப் பட்டது. இதில் எழுத்தாளர் சங்கத் தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். சிறுபான்மை நலக்குழு திருப்பூர் மாவட்ட சிறு பான்மை மக்கள் நலக் குழு சார்பில் திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வை. ஆனந்தன், மாவட்ட தலைவர் முகமது ஜாபர் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
மொரட்டுப்பாளையம்
ஊத்துக்குளி வட்டம், மொரட் டுப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி முன்புறமுள்ள காந்தி திரு வுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊத்துக்குளி வட்டக் குழு சார்பில் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், வட்டக்குழு செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, வட்டக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி, த.வி.ச.வட்ட துணை தலைவர் எஸ்.கோபால கிருஷ்ணன், தமுஎகச ஊத்துக்குளி கிளை செயலாளர் மு.நந்தகுமார், மொரட்டுப்பாளையம் எம்.ஆர். ரங்கசாமி, ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊத்துக்குளி வட்டம், மொரட் டுப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி முன்புறமுள்ள காந்தி திரு வுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊத்துக்குளி வட்டக் குழு சார்பில் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், வட்டக்குழு செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, வட்டக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி, த.வி.ச.வட்ட துணை தலைவர் எஸ்.கோபால கிருஷ்ணன், தமுஎகச ஊத்துக்குளி கிளை செயலாளர் மு.நந்தகுமார், மொரட்டுப்பாளையம் எம்.ஆர். ரங்கசாமி, ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்பி மரியாதை
அகில இந்திய சமாதான ஒருமைப்பாடுக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. அதன் பின்னர் சமூக நல்லி ணக்கத்தை வலியுறுத்தியும் நாட்டின் ஒற்றுமையை வலியு றுத்தும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாடு குழு தலை வரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் கலந்து கொண்டு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் ஏஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மேயர், எம்.எல்.ஏ.
திருப்பூர் மாநகராட்சியின் சார்பில், மாநகராட்சி மைய அலு வலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆகி யோர் மலர் தூவி மரியாதை செலுத் தினர். இந்த நிகழ்வின்போது, மாநக ராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர நல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பல்வேறு அமைப் பினரும் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.