தாராபுரம், ஜன.5- தாராபுரத்தில் நடை பெற்று வரும் புத்தககாட்சி தொடர்பான விளம்பர பதா கையை கிழித்த சமூக விரோ திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தகங்க ளோடு கொண்டாடுவோம் புத்தாண்டை என்ற தலைப் பில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புத்தக காட்சி மற்றும் புத்தக விற்பனை வெள்ளியன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பர பதாகைகள் தாராபுரம் தாலுகா அலுவலகம், ஐந்துமுனை சந்திப்பு, பேருந்து நிலையம், பூக்கடை கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் தாராபுரம் தாலுகா அலுவ லகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை சமூக விரோதிகள் சிலர் கிழித்து எரிந்துள்ளனர். இதுகுறித்து தாராபுரம் காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம் மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் புத்தக காட்சி விழா ஏற்பாட்டா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.