தருமபுரி, ஜூன் 27- சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு, தருமபுரியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்பு ணர்வு பேரணி, கண்காட்சி புதனன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கலந்து கொண்டு, பேர ணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவியர்கள், சிறுதானியத்தின் பயன்பாடு கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இப்பேரணி தருமபுரி நான்கு முனைச்சாலை சந்திப்பில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மாண வியர் காட்சியப்படுத்தி சிறுதானிய உணவுகளை ஆட்சி யர் பார்வையிட்டார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடை பெற்ற சிறுதானிய விழப்புணர்வு புதிர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தருமபுரி நகர்மன் றத் தலைவர் லட்சுமி மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரா.சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மே.அன்பழகன், தலைமை ஆசிரியை கலைச்செல்வி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.