சேலம், ஜன.19- வாழப்பாடி தாலுகா, சேஷன் சாவடி வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் விவசாய கடனில் நடைபெற்ற மோசடியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா, சேஷன் சாவடி பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 55 விவ சாயிகளுக்கு கடன் கொடுத்ததாக 55 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள் ளது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கடன் பெற்ற விவ சாயிகள் திருப்பி தவணைத் தொகை யைக் கட்டியதாக கூறி ஒரே நாளில் 3 பேர் பெயரில் வரவு வைக்கப்பட்டுள் ளது. இந்த நிலையில் விவசாயிகள் பயிர் கடன் கேட்க கூட்டுறவு வங்கியை அணுகியபோது விவசாயிகளின் பெய ரில் லட்சக்கணக்கில் கடன் நிலுவை யில் இருப்பதால், அதனை உடனே கட்டுமாறு தெரிவித்துள்ளனர். இத னால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. சிபிஎம் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குண சேகரன், எ.ராமமூர்த்தி, வாழப்பாடி தாலுகா செயலாளர் வி.தங்கவேல், தாலுகா குழு உறுப்பினர்கள் வி.பழனி முத்து, ராஜா, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.