இளம்பிள்ளை, ஜன.10- ஊரடங்கு தினத்திலும் ஓய்வின்றி சங்ககிரி பேரூ ராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களின் செயல் பலரின் பாராட்டை பெற்றது. சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்று பர வலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊர டங்கு அறிவித்துள்ளது. இதனால், ஞாயிறன்று பொது மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினர். இதன் காரணமாக சங்ககிரி பேரூராட்சி முழுவதும் வெறிச் சோடி காணப்பட்ட நிலையில், அதனை பயன்படுத்திக் கொண்டு தூய்மை பணியாளர்கள் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் தள்ளு வண்டி மற்றும் வாகனங்களில் சென்று குப்பைகளை அகற்றியும், பிளீச்சிங் பவு டர்களை தெளித்தும் நகரை தூய்மைப்படுத்தினர். முழு ஊரடங்கு காலத்திலும் ஓய்வின்றி தூய்மை பணியா ளர்கள் மேற்கொண்ட இப்பணிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.