உதகை, ஆக.31- உதகை படகு இல்லத்தில் சாகச, சறுக்கு விளையாட்டு வசதிகள் 3 மாதத்தில் தொடங் கப்படும் என்று சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத்துறை நிர்வாக இயக்கு னர் சந்திப் நந்தூரி நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் புதனன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா துறை சார்பில் மேற் கொள்ள வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், உதகை படகு இல்லத் தில் “அட்வெஞ்சரஸ் டூரிசம்” எனப்படும் சாகச சறுக்கு வீர விளையாட்டு வசதிகள் தொடங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொ டர்ந்து தமிழக அரசு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இதன்படி உதகை படகு இல்லத்தில் வயநாட்டில் இருப்பது போல கயிறு பாலம் மூலம் 20 அடி உயரத்தில் கட்டி சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம். மேலும், தேனிலவு படகு இல்லம் பகுதியில் குடிசை வீடுகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை வருகிற 3 மாதத்திற்குள் தொடங்கி முடிவு செய்யப்பட்டுள்ளது. தைப்பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகள் இங்கு சாகச சறுக்கு விளையாட்டுக்கள் விளையாட லாம், என்றார். இச்சந்திப்பின் போது மண்டல மேலாளர் வெங்கடேசன், படகு இல்ல மேலாளர் சாம் சன் கனகராஜ், உதவி பொறியாளர் குண சேகரன் உட்பட பலர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந் திப்பு நந்தூரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.