நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு ஆறு நாள் வேலை வழங்கப்படுவதை கண்டித்து விதொச அமைப்பினர் சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.தங்கவேல் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட தலைவர் வி.தங்கவேல், ஒன்றிய செயலாளர் சி.எஸ்.பழனியப்பன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துசாமி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.