districts

img

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, மார்ச் 14- தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக் கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு திங்க ளன்று 1,370 கிலோ பட்டுக் கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஒரு கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ. 602க்கும், குறைந்தபட்சமாக ரூ.329க்கும், சராசரியாக ரூ. 545.32க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.7 லட் சத்து 47 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.