districts

img

புதிய மாணவர்களுக்கு வண்ணப் புத்தாடைகள் வழங்கி வரவேற்ற சிலம்ப கவுண்டன் வலசு பள்ளி ஆசிரியர்கள்

திருப்பூர், ஜூன் 24 - வெள்ளகோவில் வட்டா ரம் சிலம்ப கவுண்டன் வலசு  ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இந்த (2024 - 25)  கல்வியாண்டில் சேர்ந்த புதிய மாணவர்களை வண் ணப் புத்தாடை வழங்கி அப் பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள், பள்ளி மேலாண் மைக் குழு மற்றும் ஊர்  பொதுமக்கள் வரவேற்ற னர். தமிழகத்தில் அரசு காலை உணவுத் திட் டத்தைத் தொடங்குவதற்கு முன்பே, இப்பள் ளியில் முதன் முதலில் காலை உணவுத் திட் டத்தை செயல்படுத்தியுள்ள முன்மாதிரிப் பள்ளியாக சிலம்ப கவுண்டன் வலசு பள்ளி  சிறப்புப் பெற்றிருக்கிறது. மேலும் இப்பள்ளி யில் சேமிப்பு உண்டியல் வழங்கி மாண வர்களை சேமிக்க வைத்து, பள்ளியை விட்டு,  உயர் வகுப்புக்கு அவர்கள் செல்லும் போது  சேமிப்பின் இரட்டிப்புத் தொகையை அஞ்ச லக வைப்புப் பத்திரமாக வழங்கி வருகிறார் கள். இப்பள்ளி தலைமை ஆசிரியரின் முயற்சி யால் கடந்த எட்டு ஆண்டுகளாக தீபாவளி யன்று வெள்ளகோவில் வட்டாரத்தில் அரசுப்  பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த அல் லது ஒற்றைப் பெற்றோர் கொண்ட குழந்தை களுக்கு  வண்ணப் புத்தாடை வழங்கி வாண  வேடிக்கை நடத்தி வருகிறார்கள் இவ்வூர் மக் கள். சென்ற ஆண்டு ஒன்றரை லட்சம் ரூபாய்  மதிப்பில் 168 குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.  இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இருந்து மாணவர் முதல்வர் திட்டம் துவக்கப் பட்டு வாரா, வாரம் முதல்வர் மற்றும் அமைச் சர் பதவியேற்பு நிகழ்வு நடத்தி வருகிறார் கள். ஊர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழியில் பள்ளியின் அருகில் ரூபாய் பத்து  லட்சம் மதிப்பில் உள்ளரங்கம் மற்றும் உயர்  தொழில்நுட்ப ஒளி ஒலி அமைப்பு நிறுவப்பட் டுள்ளது. விளையாட்டுக்கென மாணவர்க ளுக்குக் காலணிகள், மூன்று வண்ண சீருடை கள் வழங்கப்பட்டுள்ளன. வாசிப்பை நேசிப் போம் என்ற திட்டத்தை உருவாக்கி, மும்மதத்  தலைவர்களை வரவழைத்து நகரும் நூல கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தமிழர் திரு நாளை முன்னிட்டு பதினைந்துக்கும் மேற் பட்ட பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள், கும்மி நடனம் என கலைநிகழ்ச்சிகள் நடத்தி  வருகிறது. 2022இல் இப்பள்ளி வெகு விமரி சையாக தனது பவளவிழாவை கொண்டாடி யது. இப்பள்ளிக்கு சென்ற ஆண்டு சிறந்த  பள்ளி மேலாண்மைக்கான விருது திருப்பூர்  மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. இப் பள்ளிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பச் சாபாளையம் ஊராட்சி தலைவர் வரதரா ஜன், வெள்ளகோவில் ஒன்றிய பெருந்தலை வர் வெங்கடேச சுதர்சன் மற்றும் பல்வேறு உயர் பெறுப்பு அரசு அலுவலர்கள் நேரில்  வருகை தந்து பார்வையிட்டு வாழ்த்துத் தெரி வித்துள்ளனர். தலைமை ஆசிரியர் கோ. பிரபாகர், தற்காலிக ஆசிரியர் கவிதா, தன் னார்வலர்கள் சங்கவி, லலிதாம்பிகை, மைதிலி, பள்ளி மேலாண்மைக் குழு தலை வர் ராஜேஸ்வரி மற்றும் திவ்யா ஆகியோர்  இந்தப் பள்ளி வளர்ச்சியில் மற்றவர்கள் ஒத் துழைப்புடன் சிறப்பாகப் பணியாற்றி வரு கின்றனர்.