கோவை, அக்.18- தமிழக அரசின் சிற்றுண்டி திட்டத் தை தனியாருக்கு தாரைவாக்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங் கத்தினர் கையெழுத்து பெறும் இயக் கத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றிய அலு வலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் “சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம்” என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல் வதற்காக சத்துணவு ஊழியர்கள் கை யெழுத்து இயக்கத்தை தொடங்கி யுள்ளனர். இதில், அரசு பணியாளராக உள்ள சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் சமையலருக்கு சமையல் உதவி யாளருக்கு மூன்று லட்சமும் வழங்க வேண்டும் முதல்வரின் காலை சிற்றுண்டி சத்துணவு ஊழியருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி, ஒன்றிய பொறுப்பாளர் சிவகாமி, ஒன்றிய தலை வர் வசந்தி ஆகியோர் தொடங்கி வைத் தனர். இதுகுறித்து மாவட்ட தலைவர் ராம சாமி கூறுகையில், “சத்துணவு உரிமை மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழு வதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது அதன்ஒருபகுதி யாக சுல்தான் பேட்டையில் கை யெழுத்து இயக்கம் தொடங்கப்பட் டுள்ளது. இந்த கையெழுத்து இயக் கத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க உள்ளோம், என்றார்.