districts

img

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை திரும்ப பெறக் கோரி கையெழுத்து இயக்கம்

உடுமலை, ஜன.20 - மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பது குறித்து வெளியிடப்பட்ட அர சாணை 140ஐ திரும்ப பெற வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சாலைப் பணியாளர்கள் திங்களன்று  உடுமலையில் கையெழுத்து இயக்கம் நடத் தினர்.  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜன.20 முதல் பிப்.28 வரை மக்கள் சந்திப்பு கையெ ழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. இதை யொட்டி திங்களன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள், வாரச்சந்தை, ரயில் ரோடு ஆகிய பகுதியில்  உள்ள மக்களை சந்தித்து சாலை பணியா ளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சங்கத்தின் கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத் தில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி  நீக்க காலத்தை, சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்ப டுத்த உத்தரவிட வேண்டும். மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கப்பட்டால் ஐந் தாயிரம் அரசு பணியிடங்கள் ஒழிக்கப்ப டும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு  பறிபோகும். எனவே மாநில நெடுஞ்சாலை கள் அனைத்தையும் அரசே நிர்வகித்து பரா மரிக்க வேண்டும். மேலும், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமி ழக அரசு கைவிட வேண்டும் என்று பொது மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சி யில், கோட்ட இணைச் செயலாளர் சிவக்கு மார்  வரவேற்று பேசினார். தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாநில துணைச் செயலா ளர் எஸ்.ஆர்.மதுசூதனன் முதல் கையெ ழுத்து போட்டு இயக்கத்தை துவக்கி வைத் தார். கோட்ட இணைச் செயலாளர் தில்லை யப்பன், வேளாண்மை துறை அலுவலர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வைர முத்து, அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளைத் தலைவர்  மார்க்கண்டேயன், மருத் துவ துறை ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் தாசன், முதுநிலை பட்டதாரி ஆசி ரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் செல்லத்துரை ஆகியோர் வாழ்த்தி  பேசினர். கோரிக்கைகளை விளக்கி சங் கத்தின் மாநிலத்தலைவர் மா.பாலசுப்பிரம ணியன் சிறப்புரை ஆற்றினார். பொதுச் செய லாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரை ஆற்றி னார். முடிவில் கோட்டப் பொருளாளர் முரு கசாமி நன்றி கூறினார்.