districts

img

தருமபுரி அரசு கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்

தருமபுரி, மார்ச் 27- தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சார்பில் 5 ஆவது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் இலவச  சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சித்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர்  ச.திவ்யதர்சினி  தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச சித்த மருந்து களையும், மூலிகைச் செடிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை,  தாம்பரம் சானடோரியம், தேசிய சித்த  மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மரு.ஆர். மீனாகுமாரி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் மரு.கே.அமுதவல்லி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக் டர் வி.கிருஷ்ண மூர்த்தி, தருமபுரி அரசு  கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. கே.கிள்ளிவளவன், தேசிய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர்கள் மரு.எம்.ராம் மூர்த்தி, மரு.பி.அருள்மொழி உட்பட மருத் துவர்கள், மாணவ, மாணவியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.