districts

img

குடிநீரை மாசுபடுத்தும் தேங்காய் நார் ஆலையை மூடுக

ஈரோடு, டிச. 18- குடிநீரை மாசுபடுத்தும் இச்சிபாளையம் தேங்காய் நார்  ஆலையை மூட வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கொடுமுடி தாலுகா 3ஆவது மாநாடு கொடுமுடி, க.ஒத்தக் கடை குமரன் மினி மஹாலில் நடைபெற்றது. தலைவர் ஆர். சிவலிங்கம் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய  தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி. வசந்தாமணி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி நிறைவுரையாற்றினார். தொழிற்சங்க தலைவர் சி.முருகேசன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.பி. கனகவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், நிறுத்தப்பட்ட ஓய்வதியம் மற்றும் உதவி தொகைகள் உடனே வழங்கப்பட வேண்டும். குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகையாக அறிவிக்கப்பட்ட ரூ.1000  வழங்க வேண்டும். நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மாநாட்டில், தலைவராக ஆர்.அமிர்தலிங்கம், செய லாளராக டி.சரவணன்,  பொருளாளராக எஸ்.பழனிச்சாமி  உள்ளிட்ட  15பேர் கொண்ட தாலுகா குழு தேர்ந்தெடுக்கப் பட்டது.