உடுமலை, ஏப்.6- பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படை யில் தண்ணீர் வழங்கப்படுவதால், உடுமலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிராமங்களில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதை தடுக்கும் வகை யில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து, தற்பொழுது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட் டுப்பாடு நிலவுகிறது. இதனால் கடந்த மாதம் முதல், தினம் ஒரு பகுதியில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேவைக்கு ஏற்ப குடி நீர் வழங்கப்படுவதில்லை என்று கூறி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்க முடியவில்லை. பல கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந் தவுடன், அது வரை பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளி லிருந்து ஊர் பொதுக்குழாய்களில் குடிநீர் வழங்கப்படுவது நிறுத்தப் பட்டது. இதனால், பல கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படை யில் குடிநீர் வழங்கப்படுகிறது. இப் பகுதிகளில் புதிய வீட்டுமனைகள் அதிகமானதால் குடிநீர் தேவையும் அதிகமாக உள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப் படும் குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே, ஊராட்சி நிர்வா கம் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த ஆழ்குழாய் கிணறுகளை சீர்செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகை யில் செயல்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.