districts

குறுகிய சாலை - பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசி, மே 19- அவிநாசி அருகே குறுகிய சாலை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனை அங்கீகாரத்துடன் 1995ஆம் ஆண்டு கொடி காத்த குமரன் நகர் அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் 60க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில்,  பல ஆண்டு களாக போதுமான அடிப்படை வசதியில்லாமல் மக்கள் அவ திக்குள்ளாகி வந்தனர். தற்போது கான்கிரீட் சாலை அமைக் கும் பணி நடைபெறுகிறது. அப்போது சாலை மிகவும் குறு கியதாக அமைக்கப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதி யில் 28 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதியில்லை.  வீட்டுமனை அங்கீகாரம் பெறும் போதே 40 அடி சாலைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 13 அடி கான் கிரீட் சாலை தான் அமைக்கவுள்ளனர். குறுகிய சாலை அமைத்தால், வாகனங்கள் வந்து செல்ல இடையூறாக இருக் கும். ஆகவே, 20 அடி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி, ஒன்றிய நிர்வா கத்தினர், கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.