districts

img

உதகையில் துவங்கிய குறும்பட விழா

உதகை, டிச.29- உதகையில், துவங்கிய குறும்பட விழாவில், 45 நாடுகளைச் சேர்ந்த இயக் குநர்களின் 120 குறும்படங்கள் திரையி டப்படவுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் நீல கிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை  சார்பில், ஆண்டுதோறும் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த  குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப் பட்டு வரும் இவ்விழா, இம்முறை ஞாயி றன்று உதகையில் உள்ள அசெம்பளி ரூம்ஸ் திரையரங்கில் துவங்கியது. இவ் விழாவினை நீலகிரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா துவக்கி வைத்தார். இவ்விழாவில், 45  நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்களின்  120 குறும்படங்கள் திரையிடப்படடுள் ளது. இதுகுறித்து நீலகிரி பிலிம் கிளப் தலைவர்கள் ரவி செந்தில்குமார், முக மது பரூக் ஆகியோர் கூறுகையில், உதகை குறும்பட விழா அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை மூன்று நாட்கள் குறும்பட விழா நடக் கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 குறும்படங்கள் திரை யிடப்படவுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடி கருக்கான தங்க யானை மற்றும் பசுமை  யானை விருதுகள் இவ்விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். இந்த  ஆண்டு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த  4 குறும்படங்களும் திரையிடப்படு கிறது. பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை பார்வையாளர்கள் இலவசமாக காணலாம், என்றார்.