districts

img

பழங்கரை ஊராட்சியை மாநகராட்சியிடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டம்

அவிநாசி, அக்‌.14 – அவிநாசி ஒன்றியம், பழங்கரை  ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சி யுடன் இணைப்பதைக் கைவிடக் கோரி கடைகளை அடைத்து அப்ப குதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப் பினர், துறை சார்ந்த அதிகாரிகள் என  அனைவரிடமும் அனைத்துக் கட்சியி னர் மனு அளித்தும், மாநகராட்சியு டன் இணைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்து கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தி ருந்தனர். அதன்படி திங்களன்று  தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தி லும், வணிக நிறுவனங்கள், தேநீர்  கடைகளை அடைத்தும், பொது மக்கள் வீடு மற்றும் சாலையோரங்க ளில் கருப்புக் கொடிகளை கட்டியும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  போராட்டம் குறித்து பிளக்ஸ் பேனர்  வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ்  பேனரை பேரூராட்சி நிர்வாகம், அப்பு றப்படுத்தியுள்ளது.  இதைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ,  காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல  கட்சியினர், பேரூராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு, பேரூராட்சி தலைமை கணக்கரிடம் இது குறித்து  கேள்வி எழுப்பினர். இதில் தலைமை  கணக்கர், தாங்கள் கூறியதை பேரூ ராட்சி செயலரிடம் தெரிவிக்கின் றேன், யார் அப்புறப்படுத்தினார்கள் என்று தங்களுக்கு தெரிவிக்கிறோம் எனக் கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். இதில் அதிமுக முன்னாள் ஊராட் சிமன்றத் தலைவர் செந்தில், சண்மு கம், சிபிஎம் அ.ஈஸ்வரமூர்த்தி, பி.பழ னிச்சாமி, சிபிஐ கோபால், முத்து சாமி, காங்கிரஸ் கட்சி கோபால், ஜெக நாதன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேலும் இதுகுறித்து அனைத்து கட்சியினர் தெரிவிக்கையில், பழங் கரை ஊராட்சியை மாநகராட்சியு டன் இணைப்பதைக் கைவிட்டு, பேரூ ராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது அவிநாசியுடன் இணைத்து நகராட்சியாக உயர்த்த வேண்டும். மேலும் இக்கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அரசு  மாநகராட்சியுடன் இணைக்க முயற்சி  செய்தால், அனைத்துக் கட்சியினர் கூடி ஆலோசனை மேற்கொண்டு அடுத்தக் கட்டப் போராட்டம் நடத்தப் படும் என தெரிவித்தனர். அனைத்துக்  கட்சியினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்ட பிளக்ஸ் பேனர் அதே இடத்தில் மீண் டும் வைக்கப்பட்டது.