districts

உச்சநீதிமன்ற ஜல்லிக்கட்டு தீர்ப்பு கார்த்திகேய சிவசேனாதிபதி மகிழ்ச்சி

திருப்பூர், மே 18 - ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்ப தாக சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும், அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலை வருமான கார்த்திகேய சிவசேனாதிபதி கூறினார். உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு தடையில்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில்,  வியாழனன்று கார்த்திகேய சிவசேனாதிபதி செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக தில்லி  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை நிறை வடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.  ஜல்லிக்கட்டு போட் டிக்கு தடை இல்லை எனவும், மாநில அரசு கொண்டு வந்த அவ சர சட்டம் ரத்து செய்யப்படாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்காக எத்தனையோ பேர் சட்டரீதியாக போராடி வந்த னர். அதில் சிறிய அளவு பங்கு செலுத்தி இருப்பது, தற் போது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும், தற்போது முதல்வராக பொறுப் பேற்ற மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர் பான சட்ட விவரங்களை கேட்டு அதில் வெற்றி பெற தேவை யான வாதங்களை முன்வைத்தனர். தற்போது தீர்ப்பு  நமக்கு சாதகமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்க கூடியதாக  உள்ளது என்று தெரிவித்தார்.