உதகை, டிச.10- 5 ஆண்டுகளாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீல கிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதி யை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (51). இவர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் அமைச்சுப்பணி கண்காணிப் பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தில் பணி புரிந்து வரும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மோகன கிருஷ்ணனின் தொடர்ந்து அத்து மீறிய நிலையில், அந்த பெண் ஊழியர் எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத் தாமல் மோகன கிருஷ்ணன் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டுக்கே சென்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் புகார் மனு அளித்துள் ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட ஆஷிஷ் ராவத் “விசாகா விசாரணை குழுவுக்கு பரிந்துரை செய்து உள்ளார்.
பாலியல் தொல்லை குறித்து விசாரித்த விசாக குழு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததை உறுதி செய்தது. இதையடுத்து பெண் ஊழியர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து காவல் ஆய் வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 376 (பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்தல்) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து மோகன கிருஷ்ணனை கைது செய்த னர். இதைத் தொடர்ந்து அவரை உதகை கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறை யில் அடைத்தனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனின் மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பின ராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது, கைது செய்யப்பட் டுள்ள மோகனகிருஷ்ணன் 1998ஆம் ஆண்டு அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். இதை யடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்ளர் அலுவ லகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அப்போது முதல் 38 வயது பெண் ஊழியர் தவிர பலருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக 3 பேர் புகார் கொடுத் ள்ளனர். இது குறித்தும் விசாகா கமிட்டியினர் தற்போது தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை போலீஸ் காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.