districts

சமூக ஆர்வலர் என்ற பெயரில் நியாய விலைக் கடை பெண் விற்பனையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு

திருப்பூர், ஜூன் 19- செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் நியாய விலைக் கடை பெண் விற்பனையாளர்க ளுக்கு பாலியல் தொந்தரவு தரும் ஈபி சரவ ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங் கம் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மனு அளிக்கப் பட்டது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சிஐடியு மாவட்ட தலைவர் ஆட்சியர்  அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, செட்டிபாளையம் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நல்ல  முறையில் செயல்பட்டு வருகிறது. விவசாயி களுக்கு பயிர் கடன், பொதுமக்களுக்கு நகை  கடன், இ சேவை மையம் மூலம் பொது மக்க ளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்க ளும் தங்கு தடையின்றி வழங்கி வருகிறது.  

மேலும் 25 நியாய விலை கடைகளை நடத்தி 23  ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு  குடுமைப் பொருட்கள் வழங்கி சிறப்பான  முறையில் செயல்பட்டு வருகிறது. இதில், சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு ஈபி  சரவணன் என்பவர் ஆளுங்கட்சி என்ற  போர்வையில் செட்டிபாளையம் கூட்டுறவு  கடன் சங்கத்தில் அதிகப்படியான தலை யீடுகள் செய்து வருகிறார். மேலும், நியாய  விலை கடையில் பணிபுரியும் சில பெண் ஊழி யர்களிடம் தொடர்புவைத்துக் கொண்டு  சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு சங் கத்தின் செயல்பாடுகள் குறித்து உண்மைக்கு  மாறான செய்திகளை வாட்சப் குழுக்கள்  மற்றும் அதிகாரிகளிடத்திலும் தொடர்ந்து  அவதூறு பரப்பி வருகிறார். பெண் ஊழியர் களுக்கு பாலியல் தொந்தரவும் செய்து வரு கிறார். நியாய விலை கடை ஊழியர்களிடம்  கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மிரட்டி பணம்  பறிப்பதாக பொய்யான தகவல்களை  வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பதிவிட்டு பணிபு ரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சலை  ஏற்படுத்தி வருகிறார். மேலும், சில நியாய  விலை கடைகளுக்கு சென்று விற்பனையா ளர்கள் விடுப்பில் சென்று உள்ளார் என்று  தெரிந்தும் வேண்டுமென்றே கடையை பூட்டு  போட்டுள்ளது என்று அதிகாரிகளுக்கு தவ றான தகவல்களை வழங்கி வருகிறார். ஊழி யர்களை மிரட்டி பத்திரிகைகளில் செய்தி  வெளியிடுவேன் என்று பணம்பறிக்க முயற்சி  செய்கிறார். எனவே சமூக ஆர்வலர் என்ற  போர்வையில் செயல்படும் இவர் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டுகி றோம், தவறும் பட்சத்தில் நியாய விலைக்  கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்து வோம் என்று கூறப்பட்டுள்ளது.