districts

img

வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ஈரோடு, மார்ச். 5- இணைவு சக்கர வாகனங்க ளுக்கு லைசன்ஸ் வழங்க முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், வட்டாட்சியர் அலுவல கத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும், மாதாந் திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர்  கூட்டத்தை கொடுமுடி, மொடக்கு றிச்சி, ஈரோடு, பெருந்துறை வட்டாட் சியர் அலுவலகங்களில் நடத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத் தில் நான்கு மணிநேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண் டும். இணைவு சக்கர வாகனங்க ளுக்கு லைசன்ஸ் வழங்க முகாம் நடத்த வேண்டும். பஸ் பாஸ், ரயில்  பாஸ் போன்றவைகளில் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சான்றிட்டு தரவேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர், மொடக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத் தில் குடியேறும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ  இடத்திற்கு வந்த மாற்றுத்திற னாளிகள் மாவட்ட அலுவலர் குழந் தைசாமி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, போராட்டம் விலக்கி கொள் ளப்பட்டது. முன்னதாக, போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் சொங்கப்பன் தலைமை வகித்தார். அகில இந்திய செயல் தலைவர் நம்பு ராஜன், மாவட்டப் பொருளாளர் ராஜு, மாவட்ட துணைத் தலைவர் ப.மாரிமுத்து,  மாவட்ட துணைச் செயலாளர் சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் ரேணுகா, கொடுமுடி தாலுகா செயலாளர் சசி, ஈரோடு உழைக்கும் மக்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் சி.முருகேசன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளா ளர் லோகநாதன் உள்ளிட்ட 50க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.