நாமக்கல், அக்.13- வைப்பமலையில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மல்ல சமுத்திரம் கிழக்கு ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரம் ஒன்றியம், பெரிய மணலி சக்திநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மல்ல சமுத்திரம் கிழக்கு ஒன்றிய முதல் மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர்கள் கே.பூபதி, ஜீ.பழனியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். கிளைச் செயலாளர் கே.செல்வராஜ் செங்கொடியை ஏற்றி வைத் தார். ஒன்றியக்குழு உறுப்பினர் டி.பூபதி முரு கன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மோகனப்பிரியா வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ந.வேலுசாமி துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் வி.தேவராஜ் அறிக் கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், வையப்பமலையில் புற நகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட் டூர் அணையில் இருந்து வெளி யேறும் உபரிநீரை, திருமணி முத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டும். வையப்ப மலை, பெரியமணலி, பால மேடு உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் பிர சவம் பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். செக்காரப் பட்டியில் அனைத்து பேருந்து களும் நின்று செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். மல்லசமுத்திரம் பேரூராட்சியை தரம் உயர்த்தி, தனி தாலு காவாக அறிவிக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்ப ளம், வேலை நாட்களை உயர்த்த வேண் டும். மகளிர் உரிமைத்தொகை கேட்டு மனு செய்துள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் மல்ல சமுத்திரம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக வீ.தேவராஜ் மற்றும் 9 ஒன்றியக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி நிறை வுரையாற்றினார். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.துரைசாமி நன்றி கூறினார்.