districts

img

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

கோவை, ஆக.13-  சுதந்திர தினத்தில் எவ்வித அசம்பாவித சம்பவமும்  நடைபெறக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கோவை ரயில் நிலையத்தில், பயணிகளி டம்  தீவிர சோதனையில் ரயில்வே போலீசார் ஈடுபட்ட னர். ஆக.15 ஆம் தேதியன்று நாடு முழுவதும் சுதந்திர  தினம் கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்டத்தி லும் ஆக. 15 ஆம் தேதியன்று வ.உ.சி மைதானத் தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மாநகராட்சி அலுவல கத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளானது நடைபெறும்.  இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம் பாவிதங்களை தடுக்கும் விதமாக கோவை ரயில்  நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், வெளியூர்களில் இருந்து வரும் பய ணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன.