அவிநாசி, ஜன.25- அவிநாசி தாலுகா பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதை பிடிப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு இருப்பதாக வும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மாவட்ட துணை வனப் பாதுகாவலர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட துணை வனப் பாதுகாவ லர் கிருஷ்ணசாமி செவ்வாயன்று கூறியதாவது: பாப்பாங் குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்த நிலையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தினர். வேட்டை தடுப்பு காவலரை சிறுத்தை தாக்கிய நிலையில், அப்பகுதியில் சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் செவ்வாயன்று காலை முதல் சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளது. இருப்பினும் பாப்பாங்குளம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள அனைத்து பகுதிகளிலும் வனப்பாதுகாப்புத் துறையி னர் 80 பேர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றோம். மக்கள் வீடுகளை விட்டு வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.