அம்பத்தூர், ஆக. 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், அம்பத்தூர் பகுதி மோட்டார் வாகன சங்கத்தின் செயலாளர் தோழர் அ.ராயப்பன் மகனும், கட்சி உறுப்பினர் ஜேம்ஸ் சகோதரருமான பாபு (42) சனிக்கிழமை காலை 10.30 மணி யளவில் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா.பூபாலன், ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, ஏ.எஸ்.கண்ணன், பி.மாரியப்பன், ஆர்.விஜயகுமார் (சிபிஐ), தனசேகரன் (திமுக), சு.பால்சாமி (சிஐடியு), சிபிஎம் நிர்வாகிகள் இ.பாக்கியம், பி.ஜி.கே.ரமேஷ், ராபர்ட்ராஜ், ஆர்.ராஜன், வே.கிருஷ்ணசாமி, சி.ஆனந்த், பிரபு, எம்.பகத்சிங், சின்னப்பன், சதாசிவம், சிஐடியு நிர்வாகிகள் சிதம்பரம், டில்லி, சந்தானம், மாரி, ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் திருமுல்லை வாயலில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.