கோவை, ஜன. 24- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.சிவசாமி செவ்வாயன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், சின்னவேடம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலை வருமான கே.சிவசாமி (85) காலமானார். மார்க்சிஸ்ட் கட்சி 1964ல் உதயமான போது, கோவை மாவட்டத் தில் வடக்கு தாலுகா ஸ்தாபக கமிட்டி அமைக் கப்பட்ட போது அதில், தாலுகாகுழு உறுப்பி னரானார். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தாலுகாகுழு உறுப்பினராக கட்சி யின் பணிகளை திறம்பட பணியாற்றினார். இதனையடுத்து, சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும், சிஐ டியு அகில இந்திய முதல் அமைப்பு மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றபோது, கே.ரமணி, ஆர்.வெங்கிடு, நஞ்சப்பன் உள்ளிட்ட தலை வர்களோடு இன்ஜினியரிங் சங்கத்தின் சார் பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரியும், மறைந்த தோழர் கே.சிவசாமியும் பிரதிநிதிகளாக பங்கேற்ற னர். மார்க்சிஸ்ட் கட்சியின் வலுவான அமைப்பை கொண்ட சின்னவேடம்பட்டி பேரூராட்சியின் உறுப்பினராக ஒருமுறை யும், பேரூராட்சி தலைவராக ஒருமுறையும் மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டார்.
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை களை எதிர்கொண்டு, தொழிலாளி வார்க்க உரிமைகளுக்கான போராட்டத்தில் முன் னின்ற தோழர் கே.சிவசாமி இறுதிவரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வாழ்ந்து மறைந்துள்ளார். இவரது, கட்சி பணிகள் குறித்து, களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் பகுதியில், மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் எழுதியுள்ளது குறிப்பி டத்தக்கது. இவரது இணை யர் விஜயலட்சுமி கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினராகவும், தற்போது எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தி லும், மாதர் சங்க பணிகளை யும் மேற்கொண்டு வருகிறார். தோழர் கே.சிவசாமியின் இரு மகன்களும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொறுப்புகளி லும், ஒன்றிய பொறுப்புகளிலும் பணியாற்றி வருகின்றனர். கட்சி குடும்பமாய் உள்ள தோழர் கே.சிவசாமி, கட்சியின் மூத்த தோழர் ஆர்.வெங்கிடுவின் மருமகனாவார். வயது மூப்பின் காரணமாக உடையாம் பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், செவ்வாயன்று காலமானார். இவரது மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாநிலக்குழு உறுப் பினர்கள் கே.காமராஜ், செ.முத்துக்கண் ணன், எம்.கண்ணன், ஏ.ராதிகா, கட்சியின் மூத்த தோழர் ஈரோடு கே.துரைராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, தீக்கதிர் கோவை பதிப்பு மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், எஸ்.எஸ்.குளம் கிழக்கு பகுதி செயலாளர் ஆர்.கோபால், மேற்கு பகுதி செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இன்ஜினி யரிங் சங்கம் உள்ளிட்ட வர்க்க வெகுஜன அமைப்பின் தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள் வி.இராமமூர்த்தி, சுமதி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் உடையாம்பாளையத்தில் நல் லடக்கம் செய்யப்பட்டது.