districts

img

மூத்த தோழர் கே.நாராயணன் காலமானார்

மூத்த தோழர் கே.நாராயணன் காலமானார் நாமக்கல், ஆக.1- மூத்த தொழிற்சங்கவாதியான தோழர் கே.நாராயணன் வியானன்று காலமா னார். இவரின் மறைவு செய்திக்கு சிஐடியு தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தி ரராசன், ஆர்.கருமலையான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, மறைந்த தோழர் கே.நாராயணன் ஒன்று பட்ட சேலம் மாவட்டத்தில் முக்கிய தொழிற்சங்க தலைவராக செயல்பட்டவர். விசைத்தறி தொழிலாளிகள், காகித ஆலை  தொழிலாளர்கள், இன்னும் பிற தொழிற்சங்க போராட்டங்க ளில் சமரசமின்றி, தொழிலாளிகளின் உரிமைக்கான போராட் டத்தை முன்னின்று நடத்தியவர். தொழிலாளர்களின் உரிமை களை பெற்றுத் தந்தவர். தோழர் கே.நாரயணன் மறைவு செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. இவரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலையும், இவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளது.  இதேபோன்று சிஐடியு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தோழர் கே.நாராயணன் கேரளத்தில் பிறந்து,  நாமக் கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு வருகை தந்து, மருத்து வமனையில் உதவியாளராக பணியில் சேர்ந்து, பிறகு காகித ஆலைத் தொழிலாளியாக பணியில் சேர்ந்து தோழர் வி.ராம சாமியோடு, தொழிற்சங்கத்தை அமைத்து,  சிறந்த போராட்ட வாதியாக திகழ்ந்தார். தோழர் அனந்த நம்பியார், தோழர்  ஏ.கே.கோபாலன், ஆர்.உமாநாத், கே.ரமணி போன்ற தலை வர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, பள்ளிபாளையம் சேஷசாய் பேப்பர் மில் போராட்டத்தை உறுதிமிக்க வகையில் நடத்தி , உரிமைகளை பெற்று தந்த, அற்புதமான தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளது. தோழர் கே.நாராயணன் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்டக் குழு செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன் , கே.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, பி.ஜெய யமணி, எஸ்.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம்.கணேச பாண்டியன்  மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள னர்.  தோழர் கே.நாராயணன் உடல் இன்று (2.8.2024) வெள் ளிக்கிழமை கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் மதியம் 12:00 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.